தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

24 மணிநேரமும் மது, கஞ்சா விற்பனை படுஜோர்...! - மணப்பாறையில் 5 பேர் கைது - latest crime news tamilnadu

திருச்சி: மணப்பாறை நகர் பகுதிகளில் 24 மணிநேரமும் மதுபாட்டில்கள், கஞ்சா விற்பனை செய்துவந்த ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

trichy

By

Published : Sep 23, 2019, 2:06 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர் பகுதியில் 24 மணிநேரமும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் மணப்பாறை நகர் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இதில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்துவந்த ராஜா, வெள்ளைச்சாமி, விஜயகுமார் ஆகிய மூவரும் காவல் துறையினரிடம் கையும் களவுமாகச் சிக்கினர். மேலும் அவர்களிடமிருந்த 284 மதுபாட்டில்களும் ரூ.7720 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் அன்று மாலை காவல் கண்காணிப்பாளரின் நேரடி தனிச் சிறப்புக் குழு காவல் படையினர் மணப்பாறை பூங்கா சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த மகாலட்சுமி, நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

மணப்பாறையில் மது, கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது

அவர்களிடமிருந்த 1,600 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.10,880-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

வழிப்பறி, கஞ்சா விற்பனை அமோகம்... 13 பேரை சுற்றிவளைத்துப் பிடித்த காவல்துறையினர்!

கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details