தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழிக்குள் பாதுகாப்பு உபகரணங்களுடன் இறங்கிய வீரர்! - fireman landed with the security equipment

திருச்சி: சுஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் ஆய்வு செய்ய ஆக்சிஜன் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் வீரர் ஒருவர் இறங்கியுள்ளார்.

sujith

By

Published : Oct 28, 2019, 11:01 PM IST

திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 77 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டுவரும் பணி 24 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்றுவருகிறது.

பாதுகாப்பு உபகரணங்களுடன் உள்ளே இறங்கிய வீரர்

குழந்தையை மீட்க பல்வேறு தரப்பினர் செய்த முயற்சி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் உள்ள 55 அடிக்கு கீழ் மண், பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக, தீயணைப்பு வீரர் அஜீத்குமார் பாதுகாப்பு உபகரணங்களுடன் உள்ளே சென்று வெளியே வந்தார்.

வெளியே எடுத்துவந்த பாறை

அவர் வரும்போது பாறை ஒன்றினை எடுத்துவந்துள்ளார். தற்போது ஆழ்துளை இயந்திரம் மூலம் துளையிடும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: சுஜித்தை வைத்து தீபாவளியை மறைக்க முயலுகிறதா ஊடகங்கள்? - விளக்குகிறார் மூத்த ஊடகவியலாளர்

For All Latest Updates

TAGGED:

sujith news

ABOUT THE AUTHOR

...view details