தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு!

திருச்சி : தச்சுத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தந்தை, மகன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

By

Published : Dec 21, 2019, 1:51 PM IST

Published : Dec 21, 2019, 1:51 PM IST

திருச்சி செய்திகள்
மின்சாரம் தாக்கி பலியான தந்தை, மகன்

கீழப்புலிவார்டு ரோடு, அண்ணா நகரையை அடுத்த வேதாத்திரி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (62). இவரது மகன் செந்திலுக்கு (33) இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தந்தை, மகன் ஆகிய இருவரும் இணைந்து தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை இருவரும் தச்சு வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே நேரத்தில் தந்தை, மகன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சிறகுகள் வெட்டப்பட்ட பச்சைக்கிளிகள் - சிகிச்சையளித்து வானில் பறக்கவிட்ட வனத்துறை!

ABOUT THE AUTHOR

...view details