திருச்சி மாநகர காவல்துறையும், ஜோசப் கண் மருத்துவமனையும் இணைந்து காவல் துறையினருக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. திருச்சி கே.கே. நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடந்த இந்த முகாமில் காவலர்களும், அவர்களது குடும்பத்தினருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த முகாமை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தொடங்கி வைத்து பேசுகையில், “அனைத்து சூழ்நிலைகளிலும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் காவல்துறையிருக்கு உள்ளது. அதனால் கண் பரிசோதனை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காவல்துறையினர் கண்களை நன்கு கவனித்துக் கொள்ளவேண்டும். வேலைப்பளு காரணமாக கண்கள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. அதற்காகத்தான் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.