தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 12, 2020, 2:50 AM IST

ETV Bharat / state

ஒரு சவரன் நகைக்காக மூதாட்டி கொலை - காவல்துறையினர் விசாரணை

திருச்சி: பாலக்கரை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

elderly woman found dead
elderly woman found dead

திருச்சி மாவட்டம் பாலக்கரை அருகே சங்கிலியாண்டபுரம் நாகம்மை தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தி (78). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (அக்.11) காலை நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவைதிறந்து பார்த்தபோது மூதாட்டி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பாலக்கரை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி அணிந்திருந்த 1 சவரன் தங்கத்தோடு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. நகைக்காக அடையாளம் தெரியாத நபர்கள் மூதாட்டியை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சொத்து தகராறில் தாத்தா அடித்துகொலை! பேரன், பேத்திக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details