திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ரிக் இயந்திரத்தின் மூலம் அதன் அருகே புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது.
இப்பணிகள் ஒருபுறம் மும்முரமாக நடந்தாலும் வேடிக்கை பார்க்கவரும் மக்கள் கூட்டத்தால் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. மணப்பாறையிலிருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வரும் சாலையில் தடுப்புகளை அமைத்து இரு சக்கர வாகனங்களில் வரும் நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். ஆனால் அவர்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு நடந்தே வந்துவிடுகின்றனர்.