தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா அச்சத்தால் ஓட்டுநர் கழுத்து அறுத்து தற்கொலை! - Trichy latest news

திருச்சி: மணப்பாறை அருகே கரோனா அச்சம் காரணமாக ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிச்சைமணி
பிச்சைமணி

By

Published : May 25, 2021, 10:48 PM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அனுக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைமணி (49). இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் சொந்த ஊர் திரும்பிய அவர், உடல்நிலைக் குறைவு ஏற்பட்டது போல் உணர்ந்து மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (மே.24), நள்ளிரவு முதல் அவரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.

அப்போது, வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் கை, கழுத்தில் பிளேடால் அறுக்கப்பட்ட நிலையில், பிச்சைமணி இறந்து கிடந்ததைக் கண்டு குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வையம்பட்டி காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

கரோனா அச்சத்தால் ஓட்டுநர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details