இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு படிப்படியாக வணிக நிறுவனங்கள் இயக்கபட்டு வருகின்றன.
இதில் வேலையிழந்து வருமானமற்று, ஏழை எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் நாடு முழுவதும் இவர்களுக்கு உதவி வருகின்றனர்.
இதில் திமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், திருச்சி மாவட்ட திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலைக்கோட்டை கோயில் அர்ச்சகர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினார்.