கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் திருச்சி பொன்மலை பணிமனையில், 503 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள அனைத்து இடங்களிலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே நிரப்பப்பட்டுள்ளனர்.
இந்தப் பணியில் சேருவதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் பயிற்சி முடித்து காத்திருந்து வரும் நிலையில், ரயில்வேயின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.