தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில் மையமாகும் சிறைச்சாலை! தீபாவளி சிறப்பு விற்பனை! - Making soap and bread at Trichy Central Jail

திருச்சி: மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறை அங்காடியில், தீபாவளி சிறப்பு விற்பனையை சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தார்.

தொழில் மையமாகமும் சிறைச்சாலை

By

Published : Oct 18, 2019, 5:00 PM IST

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்காடியில், சிறைவாசிகள் தயாரித்த இனிப்பு, கார வகைகளும், கைவினைப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறை அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி சிறைத்துறை துணை தலைவர் சண்முகசுந்தரம் பேட்டி

இங்கு சிறைவாசிகளால் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட, காற்று சுத்தீகரிப்பு பைகள் (Air purification bag) விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தீபாவளி சிறப்பு விற்பனையை திருச்சி சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், சிறைத்துறையில் கைதிகள் தயாரித்த இந்தப் பையை இரண்டு வருடத்துக்கு உபயோகப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே சிறை கைதிகளுக்கு ஐடிஐ மூலமாக தொழிற் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறினார். மேலும், மருத்துமனைகளுக்கு வழங்கப்படும் ரொட்டி சிறையில் இருந்து தயாரித்து வழங்கப்படும் என்றும் கூறினார்.

இதையும் படியுங்க:

#Exclusive: 'மத்திய அரசு அனுமதித்தால் நான் தயார்' - அமர்நாத் ராமகிருஷ்ணா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details