திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள், உடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக இன்று (மே 12) ஸ்ரீ ரங்கா கோபுர வாயிலில் சுமார் 100 நபர்களுக்கு முகக்கவசங்களும், சுமார் 200 நபர்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டன. மேலும், கோயில் வாயிலிலுள்ள 440 நபர்களுக்கு வாழை இலையில் கட்டப்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.