தமிழ்நாட்டில் இன்று (செப்.18) ஒரேநாளில் ஐந்தாயிரத்து 488 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 30 ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சியில் இன்று புதிதாக 136 பேருக்கு கரோனா பாதிப்பு - Tirchy district news
திருச்சி மாவட்டத்தில் இன்று (செப்.18) ஒரேநாளில் 136 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருச்சி
இதற்கிடையில் இன்று (செப். 18) ஒரேநாளில் திருச்சி மாவட்டத்தில் 136 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 363ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 8,431 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 795 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் 137 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.