தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா - கரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

திருச்சி: மாவட்டத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Aug 13, 2020, 6:36 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 13) ஒரே நாளில் 5 ஆயிரத்து 835 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிகிச்சைப் பலனின்றி 117 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் நோய்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355ஆக உயர்ந்துள்ளது.

இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 13) ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 550ஆக அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 534 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்தனர். இதனால், திருச்சி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 935 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details