தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 13) ஒரே நாளில் 5 ஆயிரத்து 835 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிகிச்சைப் பலனின்றி 117 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் நோய்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355ஆக உயர்ந்துள்ளது.
திருச்சியில் ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா - கரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
திருச்சி: மாவட்டத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 13) ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 550ஆக அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 534 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்தனர். இதனால், திருச்சி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 935 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.