திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 575ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 889 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 92 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருச்சியில் இன்று 98 பேருக்கு கரோனா தொற்று - திருச்சியில் 7 ஆயிரத்து 575ஆக அதிகரித்துள்ளது
திருச்சி: மாவட்டத்தில் இன்று (செப் .01) 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![திருச்சியில் இன்று 98 பேருக்கு கரோனா தொற்று திருச்சியில் இன்று 98 பேருக்கு கரோனா தொற்று](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:22:36:1598964756-tn-tri-05-corona-positive-script-photo-7202533-01092020181931-0109f-1598964571-379.jpg)
திருச்சியில் இன்று 98 பேருக்கு கரோனா தொற்று
மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 560 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக இன்று யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது வரை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உள்ளது. 895 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.