திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் சுமார் 60ஐ நெருங்கியுள்ளது.
இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஸ்டேட் பாங்க் வங்கியின் பிரதான கிளை உள்ளது. இந்த கிளையில் பணியாற்றிய ஒரு பிரிவின் மேலாளர் சுப்பையா (58) என்பவர் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவருடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.