தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 25, 2020, 8:06 PM IST

ETV Bharat / state

திருச்சியில் மேலும் 199 பேருக்கு கரோனா!

திருச்சி: மாவட்டத்தில் இன்று மேலும் 199 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona for 199 people in Trichy!
Corona for 199 people in Trichy!

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 25) மேலும் 6 ஆயிரத்து 998 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 737ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 199 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 289ஆக அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை ஆயிரத்து 276 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 333 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல் கரோனா தொற்று காரணமாக இன்று மாவட்டத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளார்கள். இதன்மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆயிரத்து 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details