தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் ஒரே நாளில் 120 பேருக்கு கரோனா

திருச்சி: மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 2) ஒரே நாளில் 120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

By

Published : Sep 2, 2020, 7:19 PM IST

Corona
Corona

தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 2) ஒரே நாளில் 5 ஆயிரத்து 990 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 959ஆக உள்ளது. 98 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,516ஆக உயர்ந்துள்ளது.


திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 120 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 684ஆக அதிகரித்துள்ளது. இன்று 104 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 664 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122ஆக உள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 898 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details