தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா இல்லாத மாநகரமாக மாறி வரும் திருச்சி - Corona cases in Trichy getting diminished unlike other cities

திருச்சி: நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருச்சி மாநகரம் கரோனா பாதிப்பு இல்லாத மாநகராக மாறத் தொடங்கியுள்ளது.

கரோனா இல்லாத மாநகரமாக மாறிய திருச்சி
கரோனா இல்லாத மாநகரமாக மாறிய திருச்சி

By

Published : Apr 30, 2020, 12:54 AM IST

மனித உயிர்கள் தொடங்கி, நாட்டின் பொருளாதாரம் வரை, கரோனா தாக்குதல் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர, இந்தியாவில் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில், திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 51 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், பூரண குணமடைந்து, பலர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

முன்னதாக 19 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று ஐந்து பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 14 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் படிப்படியாக கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் ஆறு மண்டலங்களில் தீவிரக் கண்காணிப்பு - மாநகராட்சி ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details