மத்திய அரசின் பொருளாதார சீர்கேடு நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியின் திருச்சி பொறுப்பாளர் எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி வழங்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "கொல்லைபுரம் வழியாக மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்கிறது. சரத்பவாரின் கட்சியை உடைத்தது மட்டுமின்றி, அவரது குடும்பத்திலும் உடைப்பு ஏற்படுத்தி பாஜக அரசியல் செய்கிறது. பாஜக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது.