திருச்சி: திருச்சி மாநகராட்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில், நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற, அதிமுகவைச்சேர்ந்த கவுன்சிலர்கள் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமாருடன், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர்.
சசிகலா பக்கம் சாய்கிறாரா வெல்லமண்டி நடராஜன்?: அதிமுக தொண்டர்கள் கொதிப்பு - அதிமுக தொண்டர்கள்
திருச்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தனர்.
![சசிகலா பக்கம் சாய்கிறாரா வெல்லமண்டி நடராஜன்?: அதிமுக தொண்டர்கள் கொதிப்பு சசிகலா பக்கம் சாய்கிறாரா வெல்லமண்டி நடராஜன்..? :அதிமுக தொண்டர்கள் கொதிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14653668-thumbnail-3x2-admk.jpg)
சசிகலா பக்கம் சாய்கிறாரா வெல்லமண்டி நடராஜன்..? :அதிமுக தொண்டர்கள் கொதிப்பு
முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்தார். ஆனால், வெல்லமண்டி நடராஜன் ஆப்சென்ட் ஆகவே, அவர் சசிகலா பக்கம் சாய்ந்து விடுவாரோ என ரத்தத்தின் ரத்தங்கள் ரத்தக் கொதிப்பில் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் வெல்லமண்டி நடராஜன் மூலம் சீட்டு பெற்றவர்கள் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை என்பது கூடுதல் தகவல்.
இதையும் படிங்க:தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும் - மு.க.ஸ்டாலின்