தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டுடியோ பூட்டை உடைத்து கேமராக்கள் திருட்டு - போலீசார் விசாரணை - மணப்பாறை

நள்ளிரவில் ஸ்டுடியோ கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான கேமராக்கள் திருடப்பட்டது குறித்து மணப்பாறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்டுடியோ பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான கேமராக்கள்  திருட்டு
ஸ்டுடியோ பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான கேமராக்கள் திருட்டு

By

Published : Nov 15, 2022, 10:46 PM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த பழையகாலனியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் மகன் சந்தோஷ் குமார். இவர் கடந்த மூன்று வருடங்களாக சொந்தமாக ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் ஸ்டுடியோவை பூட்டிவிட்டு வழக்கம்போல் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை வீடியோ எடுக்கும் பணிக்காக கேமராவை எடுத்துச்செல்ல கடைக்கு வந்த சந்தோஷ் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பல லட்சம் மதிப்பிலான கேமராக்கள் மற்றும் லென்ஸ்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொள்ளைச் சம்பவம் வணிகர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திருச்சியில் நவ.17-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ABOUT THE AUTHOR

...view details