மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கம், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதேபோல டெல்லியிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தையிலிருந்து கோர்ட், வெஸ்டரி பள்ளி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கண்டனப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.