தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வர்த்தக நிறுவனங்களிடம் குப்பை சேகரிப்பது 1ஆம் தேதி முதல் நிறுத்தம்' - திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி: வர்த்தக நிறுவனங்களிடம் குப்பை சேகரிப்பது, ஒன்றாம் தேதி முதல் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

By

Published : Nov 12, 2019, 7:06 PM IST

Updated : Nov 12, 2019, 8:07 PM IST

byte with Trichy Corporation Commissioner Sivasupramaniyan, வர்த்தக நிறுவனங்களிடம் குப்பை சேகரிப்பது 1ம் தேதி முதல் நிறுத்தம் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பேட்டி

திருச்சியில் உள்ள தனியார் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்களில் இருந்து குப்பைகள் மாநகராட்சி சார்பில் நேரடியாக சேகரிக்கப்பட மாட்டாது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறினார். மேலும் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திருச்சி மாநகரத்தில் நாள்தோறும் சேரும் குப்பைகளில் 30 விழுக்காடு குப்பைகள் தனியார் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், மால்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேரும் குப்பைகள் ஆகும். இவற்றை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களே அகற்றி வருகின்றனர். குப்பை அள்ளும் பணியில் மாநகராட்சி ஊழியர்களில் பெரும்பகுதியினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்' என்றார்.

Trichy Corporation Commissioner Sivasubramaniyan byte, வர்த்தக நிறுவனங்களிடம் குப்பை சேகரிப்பது 1ஆம் தேதி முதல் நிறுத்தம் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பேட்டி

எனவே 'செலவினத்தைக் குறைக்கும் வகையில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தனியார் வளாகங்கள், ஹோட்டல்களில் இருந்து குப்பைகள் சேகரிக்கும் பணியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடமாட்டார்கள். அவற்றை அந்தந்த தனியார் நிறுவனங்களே தங்கள் சொந்த செலவில் அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். சிறு கடைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது' எனக் கூறினார்.

தொடர்ந்து, 'உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஆயிரம் ஆயில் பந்துகள்...! - ஆவடி மாநகராட்சி

Last Updated : Nov 12, 2019, 8:07 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details