தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைற்றுவருகிறது. மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலில் உள்ளன. அதன்படி உரிய ஆவணம் இன்றி ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்ல தடையுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஜாபர் என்பவர் ரூ.3 லட்சமும், அதே மாநிலம் சொரனூரைச் சேர்ந்த மொய்து என்பவர் ரூ.1.20 லட்சமும் ரொக்கமாக எடுத்துக்கொண்டு மணப்பாறையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தொடங்கும் மாட்டுச்சந்தையில் மாடுகள் வாங்கக் காரில் சென்றுள்ளனர்.
அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் அவர்களிடமிருந்து உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூபாய் 4.2 ரெண்டு லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து இச்சம்பவம் இப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. சந்தைக்கு மாடுகளைக் கொண்டு வந்திருந்த விவசாயிகளும், மாடுகளை வாங்க வந்திருந்த வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.