திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்(39). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வெளிநாட்டில் இருக்கும்போது, அவரது மனைவி மகாலட்சுமிக்கு(36) பணம் அனுப்பி வைத்துள்ளார். பணம் குறித்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மனைவியின் பேச்சு முன்னுக்கு முரணாக இருந்ததால், அவரின் நடத்தையில் பாலச்சந்தருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலச்சந்தர், கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.