தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கில் உடும்பு வேட்டை... சாப்பிடுவதை டிக்டாக்கில் பதிவிட்ட 6 இளைஞர்கள் கைது! - trichy tiktok video

திருச்சி: வளநாடு அருகே உடும்பை வேட்டையாடி, சமைத்து சாப்பிட்ட வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்ட 6 இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

dsd
ds

By

Published : Apr 23, 2020, 4:54 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு, நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், தடையை மீறி பொது இடங்களில் ஒன்று திரண்டு, சீட்டு விளையாடுவது, பட்டம் விடுவது, கிரிக்கெட் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் துறையினர் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் வளநாடு அருகே சோலையம்மாபட்டியைச் சேர்ந்த சரவணன்,பொன்னர்,செல்வகுமார்,ரஞ்சித்குமார்,லோகநாதன்,சூர்யா ஆகிய ஆறு இளைஞர்களும் நேற்று முன்தினம் உடும்பு வேட்டைக்குச் சென்றுள்ளனர். அவர்கள், பிடித்த உடும்பை கும்பலாக சமைத்து சாப்பிடும் காணொலியை டிக்டாக் செயலியில் பதிவிட்டுள்ளனர்.

உடும்பு சாப்பிடுவதை டிக்டாக்கில் பதிவிட்ட 6 இளைஞர்கள் கைது

இந்தக் காணொலி டிக்டாக்கில் வைரலானதைத் தொடர்ந்து, வனத்துறையினர் கண்களில் சிக்கியது. இதையடுத்து, திருச்சி மாவட்ட வன அலுவலகத்தின் உத்தரவின்பேரில் மணப்பாறை வனத்துறையினர் 6 இளைஞர்களையும் கைது செய்தனர். ஊரடங்கு நேரத்தில் பொதுஇடத்தில் கூடி, இளைஞர்கள் சமைத்துச் சாப்பிட்டு, கம்பி எண்ணுவது வாடிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக் கொலை

ABOUT THE AUTHOR

...view details