நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 494 பேர் மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று பதிவு செய்திருந்தனர்.
இதில் அரியலூர் 8, கோயமுத்தூர் 16, திண்டுக்கல் 39, ஈரோடு 44, காரைக்கால் 1, கரூர் 25, மதுரை 17, நாகப்பட்டினம் 25, நாமக்கல் 9, நிலகிரி 7, பெரம்பலூர் 15, புதுக்கோட்டை 80, சிவகங்கை 30, தஞ்சாவூர் 29, தேனி 26, திருச்சி 25, திருப்பூர் 17, திருவாரூர் 62, சேலம் 8, தருமபுரி 5, கிருஷ்ணகிரி 2, விழுப்புரம் 1, திருவண்ணாமலை 1, திருப்பத்தூர் 2 ஆகிய 24 மாவட்டங்களைச் சேர்ந்த 494 நபர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி ரயில் நிலையத்துக்கு இன்று வந்தனர்.