தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்! - 16 லட்சம் ரூபாய் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 495 கிராம் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

By

Published : May 10, 2019, 9:16 AM IST

திருச்சி விமான நிலையத்தில் உள்ள மத்திய சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவினருக்கு தங்கம் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் திருச்சிக்கு வந்துள்ளது. அதில் பயணித்த சென்னையைச் சேர்ந்த நவாஸ் ஷெரீப் மற்றும் மைக்கேல் கரணி ஆகியோரின் உடமைகளை சோதனையிட்டபோது தங்கம் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கம் பறிமுதல்

அவர்களிடமிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்புள்ள 495 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அலுவலர்கள் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details