மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நவம்பர் 7ஆம் தேதி தனது 66ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிற அவர், வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிடுவார்.
ஆனால், இம்முறை தனது கட்சியினரை மக்கள் பணியில் ஈடுபடுத்தும் வகையில் நற்பணி தினமாகக் கொண்டாட கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களுக்கான வளர் திறன் மேம்பாட்டு மையம் போன்ற ஆக்கப்பூர்வமான நற்பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாடிய மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் கமல்ஹாசன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.