தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2020, 10:40 PM IST

ETV Bharat / state

சத்தியமங்கலம் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது!

சத்தியமங்கலம் அருகே சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்து வேட்டையாடிய இருவரை வனத் துறையினர் கைதுசெய்தனர்.

சத்தியமங்கலம் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது!
சத்தியமங்கலம் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது!

ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்த மல்லியம்துர்க்கம் மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மல்லியம்துர்க்கம் அடர்ந்த காட்டுப் பகுதியில், இருவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வனத் துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கே புதர்மறைவில் பதுங்கியிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் இருவரும் மல்லியம்துர்க்கத்தைச் சேர்ந்த பெருமாள் (49), ரவிசந்திரன் (45) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கிகளைப் பறிமுதல்செய்த வனத் துறையினர், இருவரையும் பங்களாபுதூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details