திருச்சி மாவட்டம் லால்குடி அய்யன் வாய்க்கால் கரை பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்கிற பார்த்திபன். (37). இவரது மகன் ஆகாஷ். (20). இவர் லால்குடி வளையல் கருவை தெருவைச் சேர்ந்த முக்காடு குமார் (40) என்பவரது மகள் தர்ஷினி (20) என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதல் தர்ஷினியின் தந்தை முக்காடு குமாருக்கு தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமார், லால்குடி பெரிய தெருவை சேர்ந்த பாம்பு நாகராஜ் (32) ஆகியோர் இன்று (செப்.9) மாலை பார்த்திபன் வீட்டிற்கு வந்தனர்.
மகனை கண்டித்து வைக்குமாறு இருவரும் பார்த்திபனை எச்சரித்துள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து கத்தியால் பார்த்திபனை குத்த முயன்றனர்.