கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியை அடுத்த வெள்ளகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் இளைஞர் கரண் (18). புலியூரில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை தனது நண்பருடன் மாயனூர் கதவணைக்கு சென்றுள்ளார்.
அந்த கதவணையில் இருந்து பிரிந்து செல்லும் கட்டளை மேட்டு வாய்க்காலில் இறங்கி கரணும், அவரது நண்பர்களும் குளித்துள்ளனர்.
அப்போது, வாய்க்காலை பின்பிறமாகக் கொண்டு அவர் தமது கைப்பேசியில் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென நிலைத்தடுமாறி அவர் விழுந்த அவர் நீரில் மாயமானார்.