தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 8, 2020, 2:34 PM IST

ETV Bharat / state

சாத்தான்குளம் தந்தை, மகன் மீது பொய் வழக்கே புனையப்பட்டுள்ளது - சிபிஐ தகவல்

மதுரை : சாத்தான்குளம் காவலர்களால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிபிஐ தரப்பு மதுரைக்கிளை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் மீது பொய் வழங்கே புனையப்பட்டுள்ளது - சிபிஐ தகவல்
சாத்தான்குளம் தந்தை, மகன் மீது பொய் வழங்கே புனையப்பட்டுள்ளது - சிபிஐ தகவல்

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பிணை மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன். உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அலுவலர்கள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. எனக்குப் பிணை வழங்கும்பட்சத்தில் தலைமறைவாக மாட்டேன். நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என உறுதி கூறுகிறேன். எனவே, இந்த வழக்கில் பிணை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், "சம்பவம் நிகழ்ந்த அன்று கரோனா பணியாக ஸ்ரீதர் வெளியே சென்றிருந்ததார். காவல் நிலையத்தில் அவர் இல்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கும், ஸ்ரீதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சிபிஐ எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளாமல், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். அவருக்கு முதுகெலும்பு பிரச்னை இருப்பதால், உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டும்" என வாதிட்டார்.

சிபிஐ தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், "இந்த வழக்கு தொடர்பாக 45 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பிணை வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தலைமை விசாரணை அலுவலரிடம் வழக்குத் தொடர்பான வழக்கு விசாரணை குறிப்பை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பினை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details