தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 1, 2021, 10:26 PM IST

ETV Bharat / state

சிறுமியை கடத்திய இளைஞர் மீது போக்சோ

ராமநாதபுரத்தில் 14 வயது சிறுமியை கடத்திய இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்

போக்சோ
போக்சோ

ராமநாதபுரம்: கமுதி அருகே பெருமாள் தலைவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி, கடந்த 27-ஆம் தேதி காணாமல் போனாள். இதையடுத்து சிறுமியின் தந்தை கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (27), சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் நேற்று (ஜூன் 30) மதுரையிலுள்ள சிறுமியின் உறவினர் வீட்டில், சிறுமியை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

இதுகுறித்து கோவிலாங்குளம் காவல் துறையினர், இளைஞர் செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details