தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 10, 2020, 4:01 PM IST

ETV Bharat / state

கண்டெய்னர் லாரி விபத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு!

மதுரை: திருமங்கலம் அருகே கண்டெய்னர் லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கண்டெய்னர் லாரி விபத்து
கண்டெய்னர் லாரி விபத்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சடைச்சிபட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (50) இவருடைய மகன் தவமணி (20). இருவரும் மினி சரக்கு வேனில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்பவர்கள், இன்று காலை திருமங்கலம் பகுதியில் இருந்து விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராயபாளையம் விலக்கு அருகே சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த மினி சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை காவல் துறையினர், திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கிய தந்தை, மகனின் உடலை மீட்டனர். இறந்தவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமங்கலம் - விருதுநகர் நான்குவழிச் சாலையில் நடந்த இந்த விபத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடப்பதால் காவல் துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details