வேளாண் பொருள் விற்பனை ஒழுங்குமுறை சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் சேவையில் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று சட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் இச்சட்டங்களுக்கு வரவேற்பு அளித்துள்ளார்.
இந்த நிலையில், நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், " இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் ஆதரவிலை கிடைக்காது, பெரும் வியாபாரிகள் மட்டுமே வேளாண் பொருட்களை இருப்பு வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்யமுடியும்.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி, உண்மையான விவசாயியாக இருந்தால், அதிமுகவின் ஒன்பது மாநிலங்களவை உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு வாக்களித்திருக்க மாற்றார்கள்.