தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 9, 2020, 4:36 PM IST

ETV Bharat / state

ஈரோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்பட 57 பேருக்கு கரோனா

ஈரோடு : ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 57 பேருக்கு நேற்று (ஆகஸ்ட் 8) கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 57 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி!
ஈரோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 57 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி!

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக நீதிமன்றம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர், கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளர் என நேற்று (ஆகஸ்ட் 8) ஒரே நாளில் 57 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 57 பேருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவர்களது சளி, ரத்த மாதிரிகள் தேனி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கோவிட்-19 பாதிப்பிற்குள்ளான அலுவலர்கள் பணியாற்றிவந்த அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், அவர்களது குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஈரோட்டில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை ஆயிரத்து 69 பேர் பாதிக்கப்படும், 18 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. 682 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஈரோடு நகராட்சிப் பகுதிகளைக் கடந்து தற்போது கிராமப்புறங்களிலும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதாக அறிய முடிகிறது. கடந்த சில நாள்களாக காவல்துறை அலுவலர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது ஈரோடு காவலர்கள் மற்றும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details