கரோனா தொற்று சென்னையில் அதிதீவிரமாக பரவி வருகிறது. அதனை தடுக்க மாநகராட்சி முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று (ஜூன் 23) மட்டும் சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 532 மருத்துவ முகாம்களில் சோதனை நடைபெற்றது. நாளுக்கு நாள் மருத்துவ முகாம்களை மாநகராட்சி அதிகரித்து வருகிறது. ஜூன் 22ஆம் தேதி 504 மருத்துவ முகாம்கள் இருந்த நிலையில், அது 532ஆக உயர்ந்துள்ளது.