மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளராகப் பணியாற்றிவருபவர் இளவரசன். இவர் ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் ஒதுக்குவதற்கும், தவறான கணக்கு ரசீதுகளை ஏற்றுக் கொள்வதற்கும் கையூட்டு கேட்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில், மணிகண்டன் என்ற ஒப்பந்ததாரர் நெடுஞ்சாலை டெண்டர் தொடர்பாக கொடுத்த ரசீதுகளை ஏற்றுக்கொள்வதற்கு 10 லட்ச ரூபாயை இளவரசன் கையூட்டாகப் பெற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது.