பழனியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் ரயில்வே பீட்டர் சாலை அமைந்துள்ளது. சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், கல்வெட்டுக்கள், பச்சை மரங்கள் சிறிய கோயில்கள் ஆகிய அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், அங்கு இருக்கக்கூடிய பெரியார் சிலை மட்டும் அகற்றப்படாமல் உள்ளது. பெரியார் சிலையை அகற்றிவிட்டு சாலை விரிவாக்கப் பணியை தொடர அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், பழனி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வியெழுப்பியது.