உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் கதிர்வேல் பணிபுரிந்து வந்தார். அண்மையில், அவரது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து குமரி மாவட்டம் வெளிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் விக்டோரியா கவுரி என்பவர் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பெண் வழக்குரைஞர் ஒருவர் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மதுரை சட்டக்கல்லூரியில் பயின்ற இவர் 25 ஆண்டுகளாக வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். இந்த பொறுப்பு அளிக்கப்படுவதற்கு முன்னதாக பாஜக தேசிய மகளிரணி பொதுச் செயலாளராகவும், சென்னை காமராஜர் துறைமுகத்தின் தனி இயக்குநராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.