அண்மையில் திண்டுக்கல் மாவட்ட கனிமவளத் துறை இணை இயக்குநர் பெருமாளின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று ஈரோடு மாவட்டம் பவானி அருகே கவுண்டர் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.