தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 21, 2020, 10:15 PM IST

Updated : Sep 22, 2020, 12:31 AM IST

ETV Bharat / state

'அண்ணா பல்கலை. இணைய தேர்வு தொழில்நுட்பக் கோளாறுகளை களைத்த பின் நடத்துக!'

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையவழி முன்மாதிரித் தேர்வின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மீண்டும் நிகழாமல் மாணவர்கள் எந்தக் குழப்பமுமின்றி இறுதி பருவத்தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

"அண்ணா பல்கலைக்கழகம் இணைய வழி தேர்வு தொழில்நுட்பக் கோளாறுகளை களைந்து நடத்த வேண்டும்" - மு.க. ஸ்டாலின்
"அண்ணா பல்கலைக்கழகம் இணைய வழி தேர்வு தொழில்நுட்பக் கோளாறுகளை களைந்து நடத்த வேண்டும்" - மு.க. ஸ்டாலின்

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை - அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகளை, மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலமாக எழுதுவதற்குப் பல்கலைக்கழகம் திட்டமிட்டிருக்கிறது.

அவ்வாறு மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலம் இறுதித் தேர்வுகளை எழுதுவதற்கு முன்னோட்டமாக, மாதிரித் தேர்வுகளையும் (Mock Exams) 19-09-2020ஆம் தேதி அன்று நடத்தியிருக்கிறது. ஆனால், இதில் ஏராளமான தொழில்நுட்பக் குளறுபடிகள் ஏற்பட்டு, அதன் காரணமாக ‘ஆன்லைன்‘ வாயிலான இறுதித் தேர்வுகள் எப்படி நடைபெறப் போகிறதோ என்பது குறித்து மாணவர்களிடையே பெரும் அச்சமும், பதற்ற மனப்பான்மையும் தற்போது உருவாகியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்ட இத்தகைய குளறுபடிகளைக் களைந்து, மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் மாதிரித் தேர்வினைப் பிரச்னைகள் ஏதுமின்றி வெற்றிகரமாக நடத்திய பின்னரே, இறுதித் தேர்வுகளை நடத்திட வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அவர்களுக்குப் பல முனைகளிலிருந்தும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்கள் எந்த ஐயப்பாடும், குழப்பமுமின்றி தங்கள் இறுதி பருவத் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Last Updated : Sep 22, 2020, 12:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details