இராமேஸ்வரம் நகர, கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டம், தொலைத்தொடர்பு பணிகளுக்காக குழிகள் தொண்டப்பட்டு பின்னர் மூடப்பட்டன.
இருப்பினும், சாலைகள் இன்னும் சீர்ப்படுத்தப்படவில்லை. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இச்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.