தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 8, 2020, 1:45 AM IST

ETV Bharat / state

கோவையில் ஒரேநாளில் 524 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி!

கோவை : கோவை மாவட்டத்தில் ஒரேநாளில் 524 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கோவையில் இன்று ஒரேநாளில் 524 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி!
கோவையில் இன்று ஒரேநாளில் 524 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி!

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.

குறிப்பாக, கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா பரவல் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 524 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக இதுவரை 19 ஆயிரத்து 479 பேர் பாதிக்கப்படும், 332 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதுவரை 14 ஆயிரத்து 497 பேர் குணமடைந்து வீடுத் திரும்பி உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details