சென்னையில் கரோனா தொற்று பரவலால் நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க மாநகராட்சி முகக் கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம் அமைத்து மக்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி, இன்று (ஜூலை 1) மட்டும் 535 மருத்துவ முகாம்கள் 15 மண்டலங்களில் நடைபெற்றன. அதிகபட்சமாக அண்ணாநகரில் 64 மருத்துவ முகாம்களும் அடுத்தப்படியாக திருவிக நகரில் 58 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன. இந்த 535 மருத்துவ முகாம்களில் மொத்தம் 36 ஆயிரத்து 518 பேருக்கு பரிசோதிக்கப்பட்டன. அதில் 2381 நபர்களுக்கு சிறு அறிகுறி இருந்ததால் அவர்களை கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.