தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசுமாட்டை வன்புணர்வு செய்த வட மாநில இளைஞர்கள் கைது!

திருப்பூர்: பசு மாட்டை கடத்தி வன்புணர்வு செய்த மூன்று வட மாநில இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், காவல் துறையில் ஒப்படைத்தனர்.

By

Published : Sep 3, 2019, 12:52 PM IST

பசுமாட்டை வன்புணர்வு செய்த வட மாநில இளைஞர்கள் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பெருமாக்கவுண்டன்பாளையத்தில் கந்தசாமி என்ற விவசாயிக்கு சொந்தமான பசுமாடு அவ்வப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இரவு வேளைகளில் நன்றாக இருக்கும் பசுமாடு காலையில் பலவீனமாக இ்ருந்ததை சில நாட்களாக கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு பசுமாட்டை வெளியே கட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் சப்தம் கேட்டு விழித்த கந்தசாமி வெளியே வந்து பார்த்த போது பசுமாட்டினை காணவில்லை என தேடியுள்ளார். அப்போது அருகில் உள்ள கோழிப்பண்ணை அறையில் இருந்து சப்தம் வருவதை கவனித்த கந்தசாமி பசுமாட்டை அறையினில் வைத்து மூன்று இளைஞர்கள் வன்புணர்வு செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பசுமாட்டை வன்புணர்வு செய்த வட மாநில இளைஞர்கள் கைது!

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வடமாநில இளைஞர்கள் மூவரையும் பிடித்து கிராமக்கள் தர்ம அடி கொடுத்து பல்லடம் காவல் துறையில் ஒப்படைத்தனர். விசாரணையில் மூவரும் அருகில் உள்ள கல்குவாரியில் பணி செய்து வந்ததும் நள்ளிரவு வேளையில் பசு மாட்டினை கடத்திச் சென்று அருகில் உள்ள கோழிப்பண்ணை அறையில் அடைத்து வைத்து தொடர்ந்து வன்புணர்வு சித்திரவதை செய்து வந்ததும் தெரியவந்தது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details