திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அறிவொளி நகர் ரத்தினசாமி நகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி அருள்மணி. இவர்களுக்கு ஜெபா, மகிமா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் அருகிலுள்ள பணியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்களது குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று (ஆக.7) காலை நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியில் வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது அங்கு அருள்மணி ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாடசாமியை காணவில்லை.