தமிழ்நாடு

tamil nadu

தமிழகத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்

By

Published : May 6, 2019, 6:02 PM IST

Updated : May 6, 2019, 6:59 PM IST

திருப்பூர்: தமிழகத்தில் மழை வர வேண்டி அவினாசியில் உள்ள லிங்கேசுவரர் கோயிலில் ஸ்ரீ வருண யாகம் நடைபெற்றது.

மழை வேண்டி சிறப்பு யாகம்!

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயங்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சிலிங்கேசுவரர் ஆலயத்தில் சிறப்பு ஸ்ரீ வருண யாகம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்

கோயில் சிவாச்சாரியார்கள் தலைமையில் வேள்வி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தெப்பகுளத்தில் இறங்கி அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர்.

மழை வேண்டி சிறப்பு யாகம்

இதனைத்தொடர்ந்து மழைவேண்டி வருண யாகம் நடைபெற்றதை தொடர்ந்து, சாமிக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Last Updated : May 6, 2019, 6:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details