தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 21, 2020, 7:32 PM IST

ETV Bharat / state

கழுத்து அறுக்கப்பட்டு இளைஞர் கொலை

திருப்பூர்: இளைஞரின் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youth murder issue திருப்பூர் இளைஞர் கொலை இளைஞர் கொலை Trippur Youth murder issue Youth murder கொலை
Trippur Youth murder issue

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர்கள் விக்கி, மன்சூர்,பாபு. இவர்கள் மூவரும் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் வீரசிவக்குமார் என்பவருக்கு சொந்தமான பழைய கட்டடத்தின் பின்புறம் தங்கியிருந்து பராமரிப்பு பணியை செய்துவந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு மது அருந்தும்போது மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மன்சூர், பாபு ஆகியோர் விக்கியை சரமாரியாக தாக்கினர். விக்கியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தப் பார்த்தனர்.

அப்போது, விக்கி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்கியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்யும் காவலர்கள்

இதைத் தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மது கேட்டு தகராறு செய்த பிரபல ரவுடி கல்லால் அடித்துக்கொலை

ABOUT THE AUTHOR

...view details